நடிகர், நடிகைகள் தற்கொலைகள் ரசிகர்களையும் திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதிலும், மன அழுத்தம் காரணமாக இளம் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்து வந்த ஜெயஸ்ரீ ராமைய்யா, பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராகவும் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில் நேற்று, இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம், இவ தனது பேஸ்புக் பக்கத்தில், ”I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஜெயஸ்ரீ அந்த பதிவை நீக்கியுள்ளார்.
அடையடுத்து, தனது பேஸ்புக் பதிவு பப்ளிசிக்காக அல்ல, தான் உண்மையிலேயே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வருவதாக, தனது பேஸ்புக் நேரலையில் கூறியவர், தற்போது தற்கொலை செய்துக்கொண்டிருப்பது ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...