இந்திய திரையுலகினரால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்றுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி ஆகியோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி கடந்த ஆண்டு அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனடி, ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியான திரைப்படங்கள் கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ’சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. இந்தப் போட்டியில் தேர்வாகி பரிந்துரை பட்டியலில் இடம்பெற வேண்டும். அதனைத் தொடர்ந்து யார் வெற்றியாளர் என்பதை ஆஸ்கர் மேடையில் அறிவிப்பார்கள்.
இந்த பொதுப்பிரிவுப் போட்டியில் ’சூரரைப் போற்று’ திரையிடலுக்காக அகாடமி திரையிடல் அறையில் அப்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள படத்தை ஆஸ்கர் குழு உறுப்பினர்கள் பலரும் பார்த்து எந்தெந்த பிரிவில் இந்தப் படத்தைத் தேர்வு செய்யலாம் என்பதை முடிவு செய்வார்கள்.
இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் இராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “உலக திரையுலகினரின் பாராட்டுகளை அள்ளிய ’சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் குழு உறுப்பினர்களின் பாராட்டுகளையும் அள்ளும் என்பதில் படக்குழுவினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர்” என்றார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...