தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார்.
’டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்திற்காக தான் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 19 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ‘டான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சி.பி.சக்கரவர்த்தி என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கூறுகையில், “தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. அவரது அடுத்த படங்கள் ( டாக்டர் & அயலான் ) 2021 வருடத்தின் ரசிகர்களின் எதிர்பாப்பில் முதன்மை இடத்தை பெற்ற படங்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அப்படங்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை அழைத்து வரும். ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது. ‘டான்’ எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையை கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தை பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி. அனிருத் அவர்களின் இசை படத்திற்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பலம். சிவகார்த்திகேயனுடனான அவரது கூட்டணி, இதுவரை பிரமாண்ட வெற்றியினை மட்டுமே பெற்றுள்ளது. அவர்களது கூட்டணியில் மீண்டும் ஒரு அற்புதமான ஆல்பத்தை கேட்க ஆவலாக உள்ளேன்.” என்றார்.
இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...