Latest News :

’நானும் சிங்கிள் தான்’ பட கதை உருவாக நயன்தாரா தான் காரணம்! - இயக்குநர் சொல்லிய சீக்ரெட்
Friday February-05 2021

த்ரீ இஸ் ஏ கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் (Three is a company production) நிறுவனம் மற்றும் புன்னகை பூ கீதா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நானும் சிங்கிள் தான்’. ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை ஆர்.கோபி என்ற அறிமுக இயக்குநர் எழுதி இயக்கியுள்ளார்.

 

நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஆர்.கோபி, ”எனக்கு குரு என்றால் தமிழ்தாசன் சார் தான். நான் இண்டிபெண்டண்ட் இயக்குநர் என்றாலும் எனக்கு நிறைய கத்துத் தந்தது அவர் தான். அவர் ஒரு ஜீனியஸ்.  

 

விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எனது வெப்சீரிசைப் பார்த்துவிட்டு என்னை தயாரிப்பாளர்கள் அப்ரோச் செய்தார்கள். இந்தப்படம் யூத் மற்றும் பேமிலி ஆடியன்ஸ்க்கான படமாகவும் இருக்கும்..  நடிகர் சிவகார்த்திகேயன் நான் ஆங்கராக இருந்து சினிமாவிற்கு வரா ஆறு வருடங்கள் ஆனது என்று சொல்லுவார் அதே போல் நானும் சினத்திரையில் இருந்து சினிமாவிற்கு வர ஆறாண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் முறையா மேடையின் முன் நிற்கிறேன். பின்னாடி  நிறைய உழைத்திருக்கிறேன்.

 

நானும் சிங்கிள் தான் என்னோட கதை, உங்களோட கதை, நம்மளோட கதை. 30 வயசுல கல்யாணம் பண்ணலன்னா உனக்கு படம் கிடைக்காதுன்னு சொன்னாங்க. படம் கமிட் ஆனதும் எனக்கு கல்யாணம் நடந்தது. அதனால் சிங்கிள்ஸ் இப்படத்தைப் பாருங்க கல்யாணம் நடக்கும்.  

 

6 வருடதிற்கு  முன்பு நயன்தாரா மேடத்தை பார்த்த போது எவ்ளோ அழகா இருக்காங்க என்று தோன்றியது. அந்த இன்ஸ்பையர் தான் படத்தில் வரும் நயன்தாரா பற்றிய டயலாக். படத்தில் நிறைய விசயங்கள் புதுசா இருக்கும். படம் கண்டிப்பா நிறைவா இருக்கும். தியேட்டரில் போய் படத்தைப் பாருங்க. தினேஷ் சார், தீப்தி மேடம் எனக்கு நன்றாக சப்போர்ட் செய்தார்கள். படத்தில் இசை அமைப்பாளர் கேமராமேன் உள்ளிட்ட  அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தலைமை பொருப்பாளர் தமிழ்தாசன் பேசுகையில், “இந்த விழாவிற்கு கோபிக்காக தான் வந்தேன். கோபி ரொம்ப ஷார்ப்பான பையன். என்னை குரு என்றார். ஆனால் குருவிற்கு முன் படம் பண்ணிட்டார். எதையும் பாஸ்டா அடாப் பண்ணிப்பார். இன்று டிவியில்  இருந்து படம் பண்ண வருவது என்பது ரொம்ப கஷ்டம். அதை கோபி இலகுவாகி இருக்கிறார். படத்தில் டிரைலர் பாடல் எல்லாமே நல்லாருக்கு. அவரோட ஸ்பெசல் டயலாக். அது நல்லாருக்கும் என நினைக்கிறேன். படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. எல்லாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

 

இளைஞர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற காதல் கதையாக உருவாகியுள்ள ‘நானும் சிங்கிள் தான்’ வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

7271

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery