மக்களிடம் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலினும் ஒருவர். விஜய் தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளினியான இவர், தற்போது தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜாக்குலின் திருமணத்திற்கு ரெடியாகி விட்டார். அவரை திருமணம் செய்துகொள்ள இருப்பவர் யார்? என்பதை அவரே சமீபத்தில் அறிவித்தார்.
அதாவது, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதில் அளிப்பது ஜாக்குலினின் பழக்கம். அப்படி ஒரு முறை ரசிகர்களுடன் அவர் உரையாடிய போது, ஒரு ரசிகர், எப்போது திருமணம்? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஜாக்குலின், நான் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன். நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள், என்று விளையாட்டாக பதில் அளித்தார்.
அவருடைய இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் பலர், “நான் ரெடி” என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...