கமர்ஷியலாக மட்டும் இன்றி இயல்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான விதார்த், வெவ்வேறு ஜானர் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’ மற்றும் ‘அஞ்சாமை’ என ஐந்து படங்களில் தற்போது நடித்து வரும் விதார்த், தனது 25 வது படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
பென்ச்மார்க் பிலிம்ஸ் (Benchmark Fims) நிறுவனம் சார்பில் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சீனிவாசன் இயக்குகிறார்.
புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திய சம்பவங்களை பரபரப்பாக நகரும் படத்தில், ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வர வேண்டும் என்கின்ற தவிப்பை, படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது.
இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். கனல் கண்ணன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெயசந்திரன் கலையை நிர்மாணிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு இசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...