Latest News :

ரசிகர்களால் ஏற்பட்ட அவமானம்! - வருத்தத்தோடு அஜித் வெளியிட்ட அறிக்கை
Tuesday February-16 2021

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பல ஆண்டுகள் ஆனாலும், அவரது புதிய படங்கள் ரிலீஸீன் போது அஜித் ரசிகர்கள் தியேட்டரில் பேனர் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது ஆகியவற்றை தொடர்ந்து செய்துக் கொண்டிருப்பதோடு, சமூக வலைதளம் வாயிலாகவும், அஜித் மற்றும் அவர் பற்றிய தகவல்களை அவ்வபோது வைரலாக்கி வருகிறார்கள்.

 

இப்படி அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களாக இருப்பவர்கள் சிலரால் அஜித்துக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு, அரசியல் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் என பல இடங்களில் அஜித் ரசிகர்கள் செய்யும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை.

 

இந்த நிலையில், ரசிகர்களின் இந்த செயலால் அஜித்துக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, இதை அவர் ரசிகர்களால் தனக்கு ஏற்பட்ட அவமானமாக பாவித்து, தனது வருத்தத்தை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

 

அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் படங்களின் மீதும் அபரிவிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

 

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ படம் சம்மந்தப்பட்ட அப்டேட் கேட்டு, அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

 

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

 

என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செய்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

7298

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

Recent Gallery