பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் பல பெரிய படங்களை தயாரித்து வரும் நிலையில், இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம் ( ஆர்.ஆர்.ஆர்) படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு இயக்குந ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட உள்ள படக்குழு, தற்போது வியாபரத்தையும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழ வெளியீட்டு உரிமையை கைப்பற்ற முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் போட்டியிட்டு வந்த நிலையில், இறுதியாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அந்த உரிமையை கைப்பற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் நேற்று வெளியிட்டது.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...