Latest News :

நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரிஷ் கைது!
Wednesday March-17 2021

பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரிஷ், பண மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

நடிகை ஜெயசித்ராவின் ஒரே மகனான அம்ரிஷ், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘நானே என்னுள் இல்லை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது அம்மா நடிகை ஜெயசித்ரா தயாரித்தார். ஆனால், இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

 

இதனால் அம்ரிஷுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததை தொடர்ந்து இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தவர், ’மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, ‘சார்லி சாப்ளின் 2’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர், தற்போது மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

 

இந்த நிலையில், ரூ.26.20 கோடி ஏமாற்றியதாக இசையமைப்பாளர் அம்ரிஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

சென்னை, வளரசரவாக்கத்தில் உள்ள நெடுமாறன் என்பவர் அம்ரிஷ் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த அம்ரிஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை நேற்று சென்னையில் கைது செய்துள்ளனர். பிறகு சிபிசிஐடி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில் அம்ரிஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

அரிய வகை இரிடியாம் பொருள் இருப்பதாக கூறிய அமிரிஷ், நேடுமாறனிடம் ரூ.26.20 கோடி பணம் பெற்றுக் கொண்டு போலியான இரிடியம் பொருளை கொடுத்து ஏமாற்றியதாக, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

7403

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery