2009 ஆம் ஆண்டு வெளியான ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான தீப்பெட்டி கணேசன், தொடர்ந்து ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பில்லா 2’, ’கண்ணே கலைமானே’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே உடல் நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தீப்பெட்டி கணேசன், கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டதோடு, தனது நிலையை ஊடகம் மூலம் தெரியப்படுத்தினார். இதனை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலர் அவருக்கு உதவி செய்தனர்.
மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்ட நடிகர் தீப்பெட்டி கணேசன், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...
நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...