Latest News :

ரஜினிகாந்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
Friday April-02 2021

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரஜினிகாந்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் உழைப்பை நம்பினால் வாழ்வில் உயரலாம், என்று தெரிவித்துள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

 

திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத, குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி, திரை வாழ்விலும் சரி, உற்சாகத்தோடு வலம் வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தமிழகம் தாண்டி உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டிருக்கும் தலைசிறந்த நடிகர் அவர். எது வந்தாலும் கலங்காத மனமும், நல்ல குணமும் அவருக்கு இந்த விருதை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். கடின உழைப்பு மிகப்பெரிய சாம்ராஜ்ய வெற்றியை தேடித்தரும் என்பதற்கு இந்த சாமானிய மனிதர் அடையாளமாய் நிற்கிறார். எனவே இவரை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு இளைஞர்கள் பலர் தங்கள் வாழ்வில் உழைப்பை நம்பினால் உயரலாம், உயரத்தை எட்டலாம் என்பதற்கு கண்முன்னே நிற்கும் மிகப்பெரிய அடையாளம் நண்பர் ரஜினிகாந்த். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நண்பர்களாய் நாங்களிருவரும் பல ஆண்டுகள் பயணித்து வருகிறோம்.

 

அந்த வகையில் அவருக்கு விருது கிடைத்ததில் அவரைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி அடைவது நானாக மட்டுமே இருக்க முடியும்.

 

இப்படிக்கு,

 

ஜெயக்குமார்,அமைச்சர்

Related News

7438

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery