காதலித்து திருமணம் செய்துக் கொள்ளும் கோலிவுட் நடிகர், நடிகைகள் சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், நடிகைகள் அமலா பால், சோனியா அகர்வால் போன்ற பல நடிகைகள் இயக்குநர்களை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டனர்.
இவர்களில் அமலா பால், விவாகரத்து வாங்கிய பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியதோடு, சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்ததோடு, பொருளாதார ரீதியாகவும் சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் அளவுக்கு அவர் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
இவரைப் போன்று தான் நடிகை சோனியா அகர்வாலும், இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, சில மாதங்களிலேயே அவரை பிரிந்து விட்டார். செல்வராகவனிடம் விவாகரத்து பெற்ற நடிகை சோனியா அகர்வாலுக்கு ரூ.2 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சோனியா அகர்வால், பொருளாதார ரீதியாக பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளாராம். மேலும், சொந்தமாக நிறுவனம் ஒன்றையும் தொடங்கியவர் அதிலும் பெரும் சரிவை சந்தித்ததால், பொருளாதார ரீதியாக ரொம்பவே கஷ்ட்டப்படுகிறாராம்.
இதனால், அவருடைய நண்பர்கள் அவரை மறுமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்த அவரை மறுமணம் செய்துக் கொண்டு அவருக்கு உதவ பல தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஆனால், முதல் திருமணத்தினால் மனத ரீதியாக பாதிக்கப்பட்டதால், மறுமணம் குறித்து யோசித்து கூட பார்க்க முடியவில்லை, என்று நடிகை சோனியா அகர்வால் கூறுவதால், அவருக்கு கைகொடுக்க நினைக்கும் தொழிலதிபர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்களாம்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...