தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவாடிகளில் குவிய தொடங்கினர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது, பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது, பெரோல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டும் வகையில் தான், நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததால், ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய், திரும்பி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்ததால், அவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார், என்ற கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...