தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயரும் நேரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தமிழகத்தை விட்டு வெளியேறிய அஞ்சலி, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்து வந்தார். நடிகர் மற்றும் அரசியல்வாதி ஒருவரது கட்டுப்பாட்டில் அவர் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், குடும்ப பிரச்சனை தீர்ந்ததால் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தற்போது தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி, தமிழ் சினிமா ஹீரோ ஒருவரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்தது தான். அதுமட்டும் இன்றி, அஞ்சலிக்கு குழந்தை இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி வருகிறது.
இந்த நிலையில், தனக்கு குழந்தை இருப்பதாக வெளியான தகவல் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ள நடிகை அஞ்சலி, ”நான் காதலில் விழுந்தேன் என்றும், எனக்கு குழந்தைகள் இருக்கிறது என்றும், தகவல் பரவி வருகிறது. காதலில் விழவே இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். ஒருவரோடு காதலில் இருந்தேன். அது நிறைவேறவில்லை. அது நடந்து இருந்தால் நானே பெருமையாக எல்லோருக்கும் சொல்லி இருப்பேன்.
நடிகை மட்டும் இன்றி எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் காதல் தோல்வியடைந்தால், அந்த வேதனையை தாங்கி கொள்வது கஷ்டம் தான். பெண்கள் இதயம் கல் இல்லை. ஆனால், அந்த வேதனையில் இருந்து நான் கொஞ்சம் சீக்கிரமாகவே வெளியே வந்து விட்டேன். அதற்கு எனது அம்மாதான் காரணம். அவர் கொடுத்த தைரியத்தில் தான் இன்னும் சினிமாவில் நீடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காதல் குறித்து விளக்கம் அளித்த நடிகை அஞ்சலி, தனக்கு குழந்தை இருப்பதாக பரவும் தகவல் குறித்து எதுவும் பேசவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...