மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்போடு நாளை (ஏப்.09) உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கிடையே, கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதில் ஒன்றாக, திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ‘கர்ணன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்ற தகவல் பரவ தொடங்கிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன், என்று தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் அறிவிப்பால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பதோடு, கடல் நடுவே ‘கர்ணன்’ படத்தின் பேனர் வைப்பது, திரையரங்குகளில் 50 அடிக்கு மேல் உயரமுள்ள பேனர் வைப்பது என கொண்டாடி வருகிறார்கள்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...