தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரோஜா. ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் பிரஷாந்த நடிப்பில் வெளியான ‘செம்பருத்தி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ரோஜா, திருமணத்திற்குப் பிறகும் சில திரைப்படங்களில் நடித்து வந்தவர், தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினார். இதனை தொடர்ந்து ஆந்திர அரசியலில் ஆர்வம் காட்டிய அவர், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், துவண்டு போகாமல் தொடர்ந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டவர், தற்போது ராஜமுந்திரி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பதோடு, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.
ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதிக்கு ஒரு ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்கள். இவர்களது சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நடிகை ரோஜா சமீபத்தில் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் ரோஜாவை விட அவரது மகள் அழகாக இருப்பதாகவும், விரைவில் அவர் கதாநாயகியாக களம் இறங்குவார், என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...