பிரபல ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குநருமான கே.வி.ஆனந்த் திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
பத்திரிகைத்துறையில் புகைப்பட நிருபராக தனது பணியை தொடங்கிய கே.வி.ஆனந்த், பிறகு பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், மோகான்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ’தென்மாவின் கொம்பத்’ என்ற மலையாள திரைப்படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், தமிழில் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ‘முதல்வன்’, ‘சிவாஜி’ என பல பிரம்மாண்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
‘கனா கண்டேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கே.வி.ஆனந்த், அப்படத்தை தொடர்ந்து ‘அயன்’, ‘கோ’, ’மாற்றான்’, ‘அநேகன்’, ‘கவன்’, ‘காப்பான்’ ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த கே.வி.ஆனந்த், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...