தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுபோல், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், திரையுலகினர் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரனின் மனைவியும், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரனின் அம்மாவுமான மணிமேகலை நேற்று திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
69 வயதாகும் மணிமேகலை அவர்களுக்கு நேற்று திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...