தமிழ் சினிமாவில் வில்லன், கதாநாயகன் உள்ளிட்ட பல வேடங்களில் நடித்து வரும் மன்சூரலிகான், திடீர் உடல் நிலை பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மன்சூரலிகான், கொரோனா என்பது பொய், மாஸ்க் அணிய வேண்டிய தேவையில்லை, என்று கடந்த ஆண்டு முதலே கூறி வருகிறார்.
மேலும், நடிகர் விவேக் உயிரிழந்தது தொடர்பாக ஊடகங்களுக்கு ஆக்ரோஷமாக பேட்டியளித்த மன்சூரலிகான், கொரோனா டெஸ்ட் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்றும், கொரோனா தடுப்பூசி போட்டதால் தான் நடிகர் விவேக் மரணமடைந்தார், என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து நடிகர் மன்சூரலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், நடிகர் மன்சூரலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட, உடனடியாக அவர் ஆம்பூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
கொரோனா டெஸ்ட் உட்ள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மன்சூரலிகானுக்கு நடைபெற்று வருவதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...