கொரோனவால் பாதிக்கப்படும் நடிகர்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் மாறன் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வருபவர் மாறன். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், விஜயின் ‘கில்லி’ படத்தில் ஆதிவாசி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அப்படத்தை தொடர்ந்து ‘மாநகரம்’, ‘டிஷ்யூம்’, ‘பட்டாசு’, ‘தலைநகரம்’, ’வேட்டைக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர், பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா’ திரைப்படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் மாறனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
48 வயதாகும் மாறன் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இன்றி, மேடை கச்சேரிகளில் கானா பாடல்களும் பாடி வந்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...