கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையே கொரோனாவால் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் மரணமடைந்து வருவது பெரும் அதிர்ச்சியளித்து வரும் நிலையில், பிரபல இயக்குநரின் குடும்பத்தில் கொரோனா கோரதாண்டவம் ஆடிய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
‘மேயாதமான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அமலா பாலை வைத்து ‘ஆடை’ என்ற படத்தை இயக்கிய ரத்னகுமார், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றியதோடு, அப்படத்தின் வசனத்தையும் எழுதினார்.
இந்த நிலையில், இயக்குநர் ரத்னகுமாரின் குடும்பத்தில் உள்ள 18 மாத குழந்தை முதல் 83 வயதுடைய மூதாட்டி வரை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்கள், தற்போது தான் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்களாம்.
இந்த தகவலை தெரிவித்திருக்கும் இயக்குநர் ரத்னகுமார், அனைவரும் பாதுகாப்பாகவும், விழிப்பாகவும் இருக்கும்படியும் கேட்டுகொண்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...