பிக் பாஸ் முதலாவது சீசன் மூலம் பிரபலமான ரைசா வில்சன், திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். அவர் நடித்த முதல் திரைப்படமான ‘பியார் பிரேமா காதல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.
இதையடுத்து கோலிவுட்டின் பிஸியான நாயகிகளில் ஒருவரான ரைசா வில்சன், சமீபத்தில் தனது முகத்தை அழகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அலோங்கோலமாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அழகு சிகிச்சை அளித்த மருத்துவர் மீது ரைசா வழக்கு தொடர, பதிலுக்கு ரைசா மீது மருத்துவர் வழக்கு தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் ரைசா பெயர் ஹாட் டாப்பிக்காக சில வாரங்கள் இருந்தது.
பிறகு கொரோனா பிரச்சனையால் மக்கள் ரைசாவை மறக்க, கிடைத்த கேப்பில், மற்றொரு சிகிச்சையை மேற்கொண்டு தனது முகத்தை சரி செய்துக் கொண்ட ரைசா, தனது சரியாகி விட்டது, என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த, தனது சோசியல் மீடியா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், ரசிகர்களிடம் நேரடியாக உரையாட முடிவு செய்த ரைசா, தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் காதல் குறித்து கேட்ட போது, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அந்த காதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்த ரைசா, தற்போது நல்ல இதயம் கொண்ட புதிய காதலருக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...