கொரோனா 2வது அலை மூலம் தமிழகத்தில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. அதேபோல், திரையுலகினர் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதற்கிடையே, சினிமா படப்பிடிப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதன் மூலம் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கதாநாயகி முதல் அம்மா வேடம் வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட தமிழத் திரைப்படங்களிலும், பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கும் கவிதாவின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
’ஆட்டுக்கார அலமேலு’, ‘நாடோடித் தென்றல்’, ‘அமராவதி’ போன்ற படங்கள் மூலம் பிரபலமான கவிதா, தமிழ், தெலுங்கு ஆகிய திரைப்படங்களில் நடிப்பதோடு, ஆந்திர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது 'நந்தினி’, ’என்றென்றும் புன்னகை’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜ் மற்றும் மகன் சாய் ரூப் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இவரது மகனின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த கொரோனா காலத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் வீட்டில் இருந்த கவிதா, தற்போதைய இரண்டாவது அலையின் போது, சீரியல் படப்பிடிப்புகளில் கலந்துக்கொண்டதால் தான், கொரோனா தொற்றுக்கு அவரது குடும்பம் ஆளானதாக கூறப்படுகிறது.
ஜீ5 மற்றும் ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான ’சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது...
இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் முக்கியமானதாக கருதப்படும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது...
‘திரெளப்தி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மோகன்...