Latest News :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை கவலைக்கிடம்!
Saturday July-03 2021

கொரோனா பாதிப்பினால் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரையுலகிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘பச்சை என்கிற காத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சரண்யா சசி, மலையாளத்தில் ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடங்களிலும் நடித்து வந்தார்.

 

Saranya Sasi

 

சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசி, கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவருடைய தோழியும், மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார்.

Related News

7605

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...