Latest News :

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை கவலைக்கிடம்!
Saturday July-03 2021

கொரோனா பாதிப்பினால் தமிழ் சினிமா மட்டும் இன்றி பிற மொழி திரையுலகிலும் பலர் உயிரிழந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்து வந்தாலும், உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல தமிழ் மற்றும் மலையாள நடிகையான சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘பச்சை என்கிற காத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சரண்யா சசி, மலையாளத்தில் ‘சோட்டா மும்பை’, ‘தலப்பாவு’, ‘மரியா காலிப்பினலு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தமிழ் மற்றும் மலையாள தொலைக்காட்சி தொடங்களிலும் நடித்து வந்தார்.

 

Saranya Sasi

 

சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசி, கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

 

கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும், அவருடைய தோழியும், மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்துள்ளார்.

Related News

7605

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

மீண்டும் இணைந்த நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் - இயக்குநர் ராஜு சரவணன்!
Tuesday March-04 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!
Tuesday March-04 2025

நானி -ஸ்ரீகாந்த் ஒடெலா -சுதாகர் செருகுரி - எஸ்...

Recent Gallery