பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார், வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 98.
1944 ஆம் ஆண்டு இந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமான திலீப்குமார், ‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன்’, ‘தஸ்தான் உள்பட பல வெற்றி படங்களில் நடித்து இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தர்.
வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த திலீப்குமாருக்கு கடந்த வாரம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த திலீப்குமார், இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98.
திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1944 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான திலீப்குமார், 50 ஆண்டுகளில் 65 திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கான உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, மற்றும் மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...