தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமடைந்த அஷ்வின், தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சாக்லெட் பாயாக உருவெடுத்து வருகிறார். சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் ‘குக் வித் கோமாளி’ மூலம் மக்களிடம் சென்றடைந்திருக்கும் அஷ்வினுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும் கதை தேர்விலும், தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் பின்னணியிலும் கவனமாக இருக்கிறாராம்.
அதன்படி, தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஹரன்.ஏ இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் நடிக்க அஷ்வின் ஓகே சொல்லியிருக்கிறார்.
முக்கோண காதல் கதையான இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது லட்டு போல இருக்கும் அவந்திகா மற்றும் தேஜூ அஸ்வினி ஆகியோர் நாயகிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் ஆடிசன் வைத்து தான் தேர்வு செய்தார்களாம். அவந்திகா பெங்களூரை சேர்ந்த மாடலாம்.
அஷ்வின், அவந்திகா, தேஜூ அஷ்வின் ஆகியோர் திரைக்கதைக்கும், காதல் காட்சிகளுக்கும் பலம் சேர்க்கும் வகையில் இருப்பதாக படத்தின் இயக்குநர் ஹரிஹரன்.ஏ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கதாநாயகிகள் கிடைத்த உடனே பூஜை போட்ட ’என்ன சொல்ல போகிறாய்’ படக்குழு படப்பிடிப்பை இம்மாதம் இறுதியில் துவங்க முடிவு செய்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...