வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலம்பரசன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி என்றாலே ரசிகர்களிடம் கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நிலையில், இவர்களுடன் சிலம்பரசனும் இணைந்திருப்பதால் எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறுதிநாள் படப்பிடிப்பின் போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
மேலும், ’மாநாடு’ படத்தில் பணியாற்றிய இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட 300 பேருக்கு நடிகர் சிலம்பரசன் விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கி படக்குழுவினரை மகிழ்வித்தார்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...