தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் விஜய். தனது படங்களில் அரசியல் வசனங்கள் பேசுவதோடு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை விமர்சித்தும் வசனம் பேசுவார்.
இதற்கிடையே, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் வித்ததுடன், அபராத தொகையான ரூ.1 லட்சத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றிக்கொள்ள முடியாது, என்று தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், என்றும் அறிவுத்தினார்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...