Latest News :

விலை போன ஆர்.கே.செல்வமணி! - தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை
Saturday August-07 2021

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நடிகர் சிம்புவால் தனக்கு ரூ.20 கோடி நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே சிம்புவிடம் இருந்து தனக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். அவரைப் போலவே வேறு சில தயாரிப்பாளர்களிடம் சிம்பு பணம் பெற்று பல வருடங்களாகியும் அது குறித்து இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதால், சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த பிரச்சனை தீர்வுகாண முடிவு செய்த தயாரிப்பாளர்கள் சங்கம், அதற்காக சிம்புவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

 

மேலும், இந்த பிரச்சனையில் தீர்வு ஏற்படும் வரை சிம்புவின் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்ததோடு, பெப்சி ஊழியர்கள் சிம்பு படப்பிடிப்பில் பங்கேற்க கூடாது, என்றும் கேட்டுக்கொண்டது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கை படி, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, சிம்பு படப்பிடிப்பில் பெப்ஸி ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்று உத்தரவிட்டார். இதனால், சிம்புவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படத்தின் தலைப்பு திடீரென ‘வெந்து தணிந்தது காடு’ என்று மாற்றம் செய்யப்பட்டதோடு, படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விட்டது.

 

இந்த தகவல் அறிந்த தயாரிப்பாளர்கள் சங்கம் ரொம்பவே அப்செட்டாகிவிட்டதாம். விசாரித்ததில், பெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியை, ‘வெந்து தணிந்தது காடு’ தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனியாக கவனித்ததால், ஆர்.கே.செல்வமணி படப்பிடிப்பு நடத்த அனுமதியளித்து விட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நேற்று மாலை அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒரு தனி நபருக்கு விலை போன ஆர்.கே.செல்வமணி தலைவராக இருக்கும் வரை பெப்சி அமைப்புடன் எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பங்கேற்காது என்று முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

7668

”இந்த அளவிற்கு கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கவில்லை” - ‘லப்பர் பந்து’ வெற்றி குறித்து ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி பேச்சு
Thursday September-26 2024

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

இந்தியில் வெற்றி பெற்ற ‘கியாரா கியாரா’ இணையத் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் ஒளிபரப்பாகிறது!
Thursday September-26 2024

ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின்  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 8’! - அக்டோபர 6 ஆம் தேதி ஒளிபரப்பாகிறது
Thursday September-26 2024

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான  விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...

Recent Gallery