தனது படங்களை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக தேவையில்லாத செலவுகள் மூலம் தயாரிப்பாளராக பெரும் நஷ்ட்டங்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், இனி தான் நடிக்கும் படங்களை தயாரிக்கப் போவதில்லை, என்ற முடிவுக்கு வந்திருப்பதோடு, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன்படி, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடித்த ‘டாக்டர்’ படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில், மற்றொரு படமான ‘அயலன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கணினி பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பும் முடியும் நிலையில் உள்ளது.
இதற்கிடையே மீண்டும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். அசோக் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஒரு படத்தை தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். மற்றொரு படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார்.
இந்த இரண்டு படங்களின் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...