பிரபல திரைப்பட நடிகை ’நல்லெண்ணெய்’ சித்ரா, உயிரிழந்தார். அவருக்கு வயது 56.
மலையாளம் சினிமா மூலம் நடிகையாக அறிமுகமான சித்ரா, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கதாநாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் சித்ரா, மோகன்லால், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த்ஹ நல்லெண்ணெய் விளம்பர படம் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால், இவரை தமிழ் ரசிகர்கள் ‘நெல்லெண்ணெய்’ சித்ரா என்றும் அழைப்பார்கள்.
இந்த நிலையில், நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு வெளியான ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா’ படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேலும் கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ‘பெல்பாட்டம்’ என்ற படம் அவர் கடைசியாக நடித்த படமாகும்.
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது...