குறுகிய காலத்தில் பிரபலமான சின்னத்திரை நடிகைகளில் சித்ராவும் ஒருவர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மூலை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிபடியாக முன்னேறினார்.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக உருவெடுத்தவர், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கிய நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார்.
சித்ராவின் தற்கொலை சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியதோடு, அவருடைய தற்கொலையின் பின்னணியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தற்போது அதன் மர்மம் விலகவில்லை.
இந்த நிலையில், சித்ரா பற்றிய ஒரு செய்தி மீண்டும் வைரலாகி வருகிறது. அதாவது, சித்ரா நாயகியாக நடித்த திரைப்படம் ‘கால்ஸ்’ அவர் மரணமடைந்த பிறகு வெளியான இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், விரைவில் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த தகவலை சித்ராவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...