‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான சோனியா அகர்வால், அப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததோடு, ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார். பிறகு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு நடிப்பு முழுக்கு போட்டுவிட்டார்.
பிறகு செல்வராகவனிடம் இருந்து விவாகரத்து பெற்றவர் மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்தவர், தற்போது சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சோனியா அகர்வால் வீட்டில் கஞ்சா வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், அவர் வீட்டில் 40 கிராம் கஞ்சா கண்டெடுக்கப்பட்டதாகவும், இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாக, கோலிவுட்டே அதிர்ச்சியடைந்தது.
ஆனால், உண்மையில் நடிகை சோனியா அகர்வால் கைது செய்யப்படவில்லை. மேலும், கன்னட நடிகை சோனியா அகர்வால் தான் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பற்றிய செய்தியில் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படத்தை போட்டு சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் கோபமடைந்த நடிகை சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்ததோடு, தன்னைப் பற்றி தவறான செய்தி வெளியிடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன், என்றும் எச்சரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...