’எனிமி’ மற்றும் ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களை முடித்துள்ள விஷாலின், புதிய படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷாலின் 32 வது திரைப்படமாக உருவாகும் இப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்திற்கு பொன் பார்த்திபன், ஏ.வினோத்குமார் வசனம் எழுதுகின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் ராணா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். இப்படம் சுனைனாவின் சினிமா வாழ்வில் முக முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...