ஜெர்மனியை சேர்ந்த இலங்கை பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் ரூ.80 லட்சம் வரை ஏமாற்றியதாக நடிகர் ஆர்யா மீது அப்பெண் புகார் அளித்தார். பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட இந்த புகாரை தமிழக காவல்துறை விசாரித்து வந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நடிகர் ஆர்யா பெயரை வைத்து வேறு இரண்டு பெயர், அந்த பெண்ணை ஏமாற்றி பணம் பறித்ததாக தெரிவித்த போலீசார், இரண்டு பேரை கைதும் செய்தது. இதனால், நடிகர் ஆர்யா மீது எந்த தவறும் இல்லை, என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு, ஆர்யாவை தப்பிக்க வைப்பதற்காக காவல்துறை, வழக்கை திசை திருப்புவதாக குற்றம் சாட்டியதோடு, ஆர்யா தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்து, அவருக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுப்போம், என்று தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்யாவின் பெயர் முதல் குற்றவாளியாகவும், அவரது தாயார் பெயர் 2 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம், நடிகர் ஆர்யா விரைவில் கைது செய்யப்படலாம், என்றும் கூறப்படுகிறது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...