இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண்விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்திற்கு ‘யானை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அருண் விஜயின் 33 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக்கை தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என மொத்தம் 33 பிரபலங்கள் வெளியிட்டனர்.
தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் ஹரி, தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அருண் விஜய் முதல் முறையாக நடிக்கும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரிபா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, கே.ஜி.எப் புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...