Latest News :

கணவரை பிரிந்த சமந்தா அறிமுக இயக்குநரோடு கைகோர்த்தார்!
Tuesday October-05 2021

நடிகை சமந்தா, தனது கணவர் நாகசைதன்யாவை பிரிந்து விட்டார். இது குறித்து நாகசைதன்யாவும், சமந்தாவும் கூட்டாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும், ஒரு தெலுங்குப் படமும் முடிவடைந்துள்ளது.

 

இதற்கிடையே கணவரை பிரிந்த சமந்தா, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் உடனடியாக அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கும் படம் ஒன்றில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.

 

மேலும், சில பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தாலும், அவை அனைத்தையும் தவிர்த்து வந்த சமந்தா, அறிமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது அனைவரையும் வியப்படை செய்துள்ளது.

 

கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தின் கதையும், சாந்தரூபன் கதை சொல்லிய விதமும் சமந்தாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதால் தான் அவர் உடனே ஓகே சொன்னாராம்.

 

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related News

7785

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery