Latest News :

பாடலாசிரியர் பிறைசூடன் மரணம்!
Saturday October-09 2021

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன், மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65.

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985 ஆம் ஆண்டு வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடல் மூலம் தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

 

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதி வந்த பிறைசூடன், திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.

 

2000க்கும் அதிகமான பாடல்களை எழுதியிருக்கும் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்த பிறைசூடன் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். 

 

அவரது மறைவு செய்தி வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related News

7798

’மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜைக்காக ரூ.1 கோடி செலவில் போடப்பட்ட கோவில் அரங்கம்!
Thursday March-06 2025

இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...

”தாத்தா சம்பாதித்ததை பேரன் ஒரே படத்தில் இழந்துவிட்டார்”! - சிவாஜி வீடு ஜப்தி பற்றி இயக்குநர் பேரரசு பேச்சு
Wednesday March-05 2025

புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...

ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!
Tuesday March-04 2025

பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...

Recent Gallery