இந்த ஆண்டின், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகுபலி படத்திற்கு பிறகு தான் இயக்கும் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ராஜமவுலி, தனது குடும்பத்தோடு ஓய்வு எடுக்க பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, தற்போது இலங்கையில் ஓய்வு எடுத்து வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அங்குள்ள தமிழர்களுடன் இணைந்து தனது ஓய்வு நாட்களை கழித்து வருகிறார்.
இலங்கையின் கலே பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிய ராஜமவுலி, அந்த இளைஞர்களின் தோலில் கை போட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, இலங்கை தமிழர்களுடன் கிரிக்கெட் விளையாடியது வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது, என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...