விஜய் நடிக்கும் அனைத்து தமிழ்ப் படங்களும் டப் செய்யப்படாமலேயே கேரளா மற்றும் ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுவருகிறது.
இந்த நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் வில்லன் வேடத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
’ஸ்பைடர்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விஜய் - மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்க நான் ரெடியாக இருக்கிறேன், என்று முருகதாஸ் கூறியிருந்த நிலையில், டிவி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளிக்கும் போது, ”விஜய் - மகேஷ் பாபு, அஜித் - மகேஷ் பாபு, விஜய் - அஜித் இதில் எந்த ஜோடியை வைத்து படம் இயக்குவீர்கள்? என்று கேள்வி கேட்க, சற்றும் யோசிக்காமல், விஜய் - மகேஷ் பாபு ஜோடியை வைத்து தான் படம் இயக்குவேன் என்று முருகதாஸ் கூறினார்.
அதுமட்டும் அல்ல, இது குறித்து அவர் விஜயிடமும் பேசிவிட்டாராம். விஜய் - மகேஷ் பாபு கூட்டணியை வைத்து படம் இயக்கினால், தமிழில் விஜய் ஹீரோவாகவும், மகேஷ் பாபு வில்லனாகவும் நடிப்பார்கள் என்றும், தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாகவும் நடிப்பார்கள், என்று கூறிய முருகதாஸ், இது தொடர்பாக விஜயிடம் பேசிய போது, மகேஷ் பாபு ஹீரோவாக நடித்தால், நான் வில்லனாக நடிக்க ரெடி, என்று விஜய் கூறினாராம்.
அதே சமயம், மகேஷ் பாபு தவிர வேறு யாராவது ஹீரோவாக நடித்தால், தான் வில்லன் வேடத்தில் நடிக்க மாட்டேன், என்ற கண்டிஷனையும் விஜய் போட்டுள்ளாராம்.
விஜயிடம் சம்மதத்தை பெற்றுவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது விஜய் - மகேஷ் பாபு கூட்டணிக்காக கதை விவாதத்தில் தீவிரம் காட்டி வருகிறாராம்.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...