சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இயங்கும் நடிகை கஸ்தூரி, அவ்வபோது சமூகம் குறித்த தனது கருத்துக்களை நையாண்டியாகவும் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் நடிகை கஸ்தூரி மோதியுள்ளார். இந்த மோதல் இருவருக்கும் இடையிலேனா பேச்சு மோதலாகும்.
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டி நியூஸ் 7 சேனலில் ஒளிபரப்பாக உள்ள பட்டிமன்றத்தில் தான் நடிகை கஸ்தூரியும், சீமானும் தங்களது பேச்சால் மோதிக்கொண்டனர்.
மாணவர்களுக்கு மத்தியில், ”தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் தலைவர்களா..? மக்களா..?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பட்டிமன்றத்தில், நடிகை கஸ்தூரியும், சீமானும் பேசியுள்ளார்கள். இவர்களோடு RJ விஜய், RJ மிருதுளா போன்றவர்களும் பேசியுள்ளார்கள்.
இந்த சிறப்பு பட்டிமன்றம் அக்டோபர் 2-ஆம் தேதி பகல் 1:00மணிக்கும் இதன் மறுஒளிபரப்பாக இரவு 9:00மணிக்கும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...
அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...
நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...