பல வெற்றி திரைப்படங்கள் மூலம் மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ரெஜிஷ் மிதிலா, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.
தி கிரேட் இந்தியன் சினிமாஸ் சார்பில் லிஜோ ஜேம்ஸுன் இணைந்து இப்படத்தை தயரிக்கும் ரெஜிஷ் மிதிலா, படத்தின் கதை எழுதி இயக்கவும் செய்கிறார்.
முழுக்க முழுக்க பேண்டஸி வகை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, ஊர்வசி, கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, மருது பட்டி(குளப்புள்ளி லீலா), நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கார்த்திக் எஸ்.நாயர் ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசையமைக்கிறார். சைலோ படத்தொகுப்பு செய்கிறார்.
இன்னும் தகைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையோடு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை, ராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...