தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பூமிகா சாவ்லா, குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்து வருபவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
கடைசியாக நயன் தாரா நடித்த ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் தோன்ற இருக்கிறார். கதையை முன்னோக்கி நகர்த்தி செல்லும் மிக முக்கியமான மையக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பூமிகா, இனி தொடர்ந்து பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாதாரண கதாபாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு அலுப்பு ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் தான் ‘கொலையுதிர் காலம்’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். இனி தொடர்ந்து அதுபோன்ற வித்தியாசமான வேடங்களில் பல தமிழ்ப் படங்களில் நடிப்பேன், என்று கூறியவர் எதிர்மறை வேடங்களில் நடிக்க தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.
கோபிசந்தின் ’சீட்டிமார்’ மற்றும் விஸாக் சென்னின் ’பாகல்’ ஆகிய இரண்டு மெகா ஹிட் தெலுங்குப் படங்களில் நடித்திருந்த பூமிகா சாவ்லா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...
எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...
விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...