Latest News :

படக்குழுவை கதறவிட்ட கதாநாயகி சுபிக்‌ஷா! - நடிகர் சங்கத்தில் புகார்
Thursday December-23 2021

சினிமா தொழிலை நம்பியிருக்கும் பல்லாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரத்திற்கு சிறு பட்ஜெட் மற்றும் அறிமுக நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்ளின் படங்கள் தான் உறுதுணையாக இருக்கிறது. ஆனால், இதுபோன்ற சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்களுக்கு அப்படத்தில் நடிக்கும் சில நடிகர், நடிகைகள் சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், அவர்கள் மீண்டும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடமால் போக, சினிமா தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

 

குறிப்பாக சில நடிகைகள் தான் நடிக்கும் திரைப்படங்களின் விளம்பரங்களின் பங்கேற்காமல் இருந்து வருகிறார்கள். இதற்கு சில மூத்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அந்த நடிகைகளின் அலட்சியப் போக்கும் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

 

அட, நயன்தாரா போன்ற நடிகைகள் தான் இப்படி படங்களின் விளம்பர பணிகளில் ஈடுபடாமல் வந்தார்கள் என்றால், தற்போது அட்ரஸ் இல்லாத நடிகைகள் கூட, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்து வர தொடங்கியிருப்பது தான் பெரும் வேதனையாக இருக்கிறது.

 

இந்த நிலையில், மலையாள சினிமாவில் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கும் ருத்ரா, ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.

 

பீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி மகேஷ் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

தற்போது படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, படத்தின் நாயகி சுபிக்‌ஷாவையும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைத்துள்ளனர். ஆனால், அவர் தான் வெளியூரில் இருப்பதாக கூறி, விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறாராம்.

 

ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவுக்கு அவரை அழைத்த போது, ஒரு பொய்யை சொல்லி எஸ்கேப் ஆனவர், தற்போது தொடர்ந்து வெவ்வேறு பொய்களை சொல்லி எஸ்கேப் ஆகிக்கொண்டிருப்பதாக படத்தின் நாயகன் ருத்ரா கூறி வேதனைப்படுகிறார்.

 

ஒரு பைசா கூட பாக்கி வைக்காமல் முழு சம்பளத்தையும் தயாரிப்பாலர் சுபிக்‌ஷாவுக்கு கொடுத்துவிட்டதோடு, படம் தொடர்பான அக்ரிமெண்ட் போடும் போது, விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாக ஒப்புக்கொண்ட நடிகை சுபிக்‌ஷா தற்போது அப்படி செய்யாமல், பட விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவது எதனால், என்று புரியாமல் படக்குழு தவித்து வருகிறது.

 

படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நாயகன் ருத்ரா ஆகியோர் சுபிக்‌ஷாவை பல முறை அழைத்தாலும், அவர் தொடர்ந்து பொய்களை சொல்லி விளம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து வருவதால், அவர் மீது நடிகர் சங்கத்தில் படக்குழு புகார் அளிக்க உள்ளனர்.

 

விஜய் மில்டனின் ‘கடுகு’ படத்தில் நாயகியாக நடித்திருந்த சுபிக்‌ஷா, அதன் பிறகு வாய்ப்பில் இல்லாமல் இருக்க, தற்போது கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இப்படி படக்குழுவை கதறவிடுவது சரியா? 

Related News

7953

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...