‘பாகுபலி’ வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. (இரத்தம் ரணம் ரெளத்திரம்) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் முன் வெளியீடு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, பாடலாசிரியர் மற்றும் வசனம் எழுதிய மதன் கார்கி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகைகளும், பிக் பாஸ் பிரபலங்களுமான அனிதா சம்பத் மற்றும் லொஸ்லியா ஆகியோர் இணைந்து நடனம் ஆடினார்கள். மேலும், நடன இயக்குநர் சாண்டி மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய திரையுலகமே காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “மிகப்பெரிய பிரமாண்டமான படமாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இயக்குநர் ராஜமவுலி மற்றும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். நான், முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்.” என்றார்.
உதயந்தி ஸ்டாலின் பேசுகையில், ”இரண்டு வருடங்களுக்குப் பிறகு சினிமா சம்மந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். அதற்கு காரணம், ராஜமவுலி சார் தான். அவருடைய பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமவுலியிடம் சொன்னேன்.
இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமவுலி கேட்டுக்கொண்டார். இப்போது ஆர்ஆர்ஆர் படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...