தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 போட்டியின் இறுதி நாளான நேற்று ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஹாரி கல்யாண், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், சினேகன் என நான்கு போட்டியாளர்களில் ஆரவுக்கு தான் அதிகமான ரசிகர்களின் வாக்குகள் கிடைத்ததாக போட்டி குழுவினர் அறிவித்து பிக் பாஸ் கோப்பையை அவருக்கு வழங்கினார்கள்.
ஆரவ் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், விஜய் டிவி-யின் இத்தகைய முடிவு, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மிஸ்டர் க்ளீன் கணேஷ் வெங்கட்ராம் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸில் ஆரவின் வெற்றி அநியாயமானது, என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலு அழுவதுபோன்ற புகைப்படம் ஒன்றை போட்டு, ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அநியாயம், என்று பதிவிட்டுள்ளார்.
#BiggBossGrandFinale
— kasturi shankar (@KasthuriShankar) September 30, 2017
ஆராம் ?
ஆரவாம்.
ஆரு ?
ஆரவ்.
ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் !#அநியாயம். pic.twitter.com/vSALY3eauA
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...