பல உண்மை சம்பவங்களை விறுவிறுப்பான இணைய தொடர்களாக தயாரித்து வழங்கி வரும் ஜீ5 ஒடிடி தளம், பல வகை கதையம்சத்துடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களையும் வெளியிட்டு வருகிறது.
‘ஆட்டோ சங்கர்’, ‘பிங்கர் டிப்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘மலேசியா டு அம்னீஷியா’, ‘விநோதய சித்தம்’, ‘பிளட் மணி’ உள்ளிட்ட பல்வேறு ஒரிஜினல் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பேவரைட் ஒடிடி தளமாக உருவெடுத்துள்ள ஜீ5 தளத்தின் அடுத்த வெளியீடு ‘விலங்கு’.
விமல், இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், ஆர்.என்.ஆர்.மனோகர், ரேஷ்மா போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில், புலனாய்வு க்ரைம் ஜானர் வெப் தொடராக உருவாகியுள்ள இந்த தொடர் வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி ஜீ5-ல் வெளியாகிறது.
ஒரு மர்மமான வழக்கை காவல்துறை அதிகாரியான விமல் விசாரிக்க, அதில் இருக்கும் மர்மங்களும், அதை தொடர்ந்து ஏற்படும் திருப்பங்களையும் விறுவிறுப்பாக சொல்வதோடு, எளிய காவலர்களின் வாழ்க்கையையும், அவர்களின் உணர்வுப்பூர்வமான பக்கத்தையும் இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்.
7 பகுதிகளை கொண்ட இத்தொடரை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் மதன் தயாரிக்க, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் புரோஷத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...