‘டான்’ மற்றும் ‘அயலன்’ படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படமான இப்படத்தை ‘ஜதி ரத்னதாலு’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்குகிறார்.
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, நாராயந்தாஸ் நரங் மற்றும் புச்கூர் ராம் மோகன் ராவ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பிலும், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.
தற்காலிகமாக ‘எஸ்.கே20’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இதில் சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.
படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...