பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
’அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான லலிதானந்த், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே...” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து ‘ரெளத்திரம்’, ‘மாநகரம்’, ‘காஸ்மோரா’, ‘ஜூங்கா’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள லலிதானந்த், ‘ஒரு எலுமிச்சையின் வரலாறு’ மற்றும் ‘லெமூரியாவில் இருந்த காதலி வீடு’ ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்த், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
ஜீ5 தளத்தில் வெளியான ’கியாரா கியாரா’ இணையத் தொடர் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த தொடரின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் பதிப்புகளை வெளியிட்டுள்ளது...
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 வரும் அக்டோபர் 6 மாலை 6 மணிக்கு கோலாகலமாக துவங்குகிறது...