செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகும் படம் ‘பேட்டரி’. மணிபாரதி இயக்கும் இப்படத்தை ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது படமான இப்படத்தின் கதை மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில், தனது காதலை நாயகனிடம் தெரிவிக்க, அவரோ கொலை வழக்கு ஒன்றின் தீவிரத்தால், காதலை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். இதனால் மனம் உடைந்த அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாக பாடுகிறார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் வரிகளில், ““நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே....என்னில் ஏதோ ஆனது நீதானே...காதலே நீதானே...பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா...“ என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையில், ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார்கள். கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது முடியும் தருவாயில் உள்ள ‘பேட்டரி’ படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Ex-Supervillan, Gru is all set to create mayhem with Lucy, his adorable children, Margo, Edith and Agnes along with the newest addition, Gru Junior...
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
டெட்பூல் மற்றும் வால்வரின் என்ற சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...